இந்தியில் பேச முடியாவிட்டால் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியிருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவில் ஆங்கிலாந்து மாற்றாக இந்திமொழி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் இது இந்தியை திணிக்கும் முயற்சி. பாஜக தொடர்ந்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க முயற்சி செய்கிறது. இத்தகைய போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டுமென்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவரும், அம்மாநில அமைச்சருமான சஞ்சய் நிஷாத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தி மீது பற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். உங்களுக்கு இந்தி பேச முடியாதென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு செல்லலாம் என்று தெரிவித்திருப்பது மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.